மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும்இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதல் நிலை வீரரும் 10 முறைசாம்பியன் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ம் நிலை வீரரானஇத்தாலியின் ஜன்னிக் ஷின்னருடன் மோதினார். இதில் ஜன்னிக் ஷின்னர் 6-1, 6-2, 6-7(6-8), 6-3என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 7-5, 6-3, 6-7(4-7), 6-7(5-7), 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டேனியல்மேத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஜிவெரேவ் – ஜன்னிக்ஷின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.